Wednesday, June 18, 2014

ஐந்தில் ஐந்தை எதிர்பார்க்காதீர்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தாக !

பகைவனிடம் அறிவுரையை ! அறிவிலியிடம் ஊழியத்தை! நற்செயல் இன்றியே சுவனம் புகுவதை ! பெண்ணிடம் உண்மையையும், வாக்குறுதி நிறை வேற்றுதலையும் ! உலகப் பற்றோடு இறைவனைத் தேடுவதையும் எதிர் பார்க்காதீர்கள் !

உன் நாவைப் பேணி, மனத்தைத் தடுத்துக் கொள்வாயாக! நீ செய்த பாவங்களை நினைத்து அழு !

நீங்கள் மனிதர்களை மிகுதியாக நினைப்பதைவிட அல்லாஹ்வை மிகுதியாக நினைவு கூர்ந்திடுங்கள் .


நீங்கள் உலகத்தை மிகுதியாகச் சிந்திப்பதைவிட மறுமையை மிகுதியாக சிந்தியுங்கள் .

நீங்கள் செய்த நன்மைகளை நினைப்பதைவிட நீங்கள் செய்துவிட்ட பாவங்களை நினையுங்கள்.

உலகில் நீண்ட நாட்கள் உயிர் வாழவேண்டும் என்று எண்ணுவதைவிட , மரணத்தை மிகுதியாக எண்ணுங்கள்.

பிறரின் குற்றங் குறைகளைப் பற்றிச் சிந்திப்பதைவிட உங்களில் நிகழ்ந்துவிட்ட குற்றங் குறைகளை நினையுங்கள்.

மூன்று செயல்கள் புகழப்பட்ட நற்குணத்தை சார்ந்த தாகும் .

துன்பத்தில் உழல்பவருக்கு [தேவையுடையவருக்கு] உதவி செய்வது.

நம்முடன் நட்புறவு கொண்டவர்களால் அவர்கள் மூலம் நிகழ்ந்துவிட்ட தீய செயலை மன்னிப்பது.

எல்லாரிடத்திலும் பணிவு காட்டுவது, ஆகிய இம்மூன்று தன்மைகளும் புகழப்பட்ட நற்குணங்களாகும் .

என்னுடைய  'தீன் [மார்க்கம்] சலாமத் பெறுவது எதிலுள்ளது ?

தீன்  சலாமத் பெறுவது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உள்ளது.

எனது  ஈமானின் ஈடேற்றம் எதிலுள்ளது?

பொய், புறம், வீண்பேச்சுக்கள், தீயவற்றை மொழிதல் ஆகியவற்றை விட்டும் உம்முடைய நாவைப்பேணிக் கொள்ளும் , அதில்தான் உம்முடைய ஈமானின் ஈடேற்றம் உள்ளது.

என்  ஆன்மா சலாமத் பெற்றிடவும் தூய்மை பெற்றிடவும் விமோசனம் எதில் உள்ளது?

உலகத்தின்  மீது பேராசை கொள்வதையும் உலகிலுள்ள இன்பங்களை அனுபவிப்பதைத் தவிர்த்து கொள்வதிலும்     இருக்கின்றது .
அல்லாஹ் மிக அறிந்தவன் 

No comments:

Post a Comment