Saturday, November 8, 2014

ஆளுவோருக்கு இருக்கவேண்டிய மூன்று

ஆளுவோருக்கு இருக்கவேண்டிய மூன்று

அல்லாஹ்வின் திருபெயரால்.......

1.விடாமுயற்சி, 2.உண்மை, 3.நீதி.

ஹசன் பஸரீ [ரஹ் ] அவர்கள் கூறுகின்றார்கள்..

ஒழுக்கம் இல்லாதவனிடம் கல்வி இருக்காது .

பொறுமை இல்லாதவனிடம் தீனைக் காணமுடியாது.

பேணுதல் இல்லாதவனிடம் இறை நெருக்கத்தைக் காண இயலாது .

ஞானி இப்ராஹீம் நக்யீ [ரஹ் ] கூறுகின்றார்கள்..

முன் சென்றோர் அழிந்தொளிந்ததேல்லாம் மூன்று செயல்களின் காரணங்களாலேயாகும் .

Sunday, August 24, 2014

இருள் ஐந்து ,, அதனை நீக்கும் விளக்குகள் ஐந்து

அல்லாஹ்வின் திருபெயரால் ....................
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

உலகப்பற்று என்பது ஓர் இருளாகும்,, [அதனை நீக்கும் ] ஒளிவிளக்கு இறையச்சம் என்னும் தக்வா ஆகும்.

பாவம் என்பது ஓர் இருளாம் ,, அதனைப் போக்கிவிடும் விளக்கு யாதெனில் பாவமிட்சியாகும் .

Wednesday, June 18, 2014

ஐந்தில் ஐந்தை எதிர்பார்க்காதீர்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தாக !

பகைவனிடம் அறிவுரையை ! அறிவிலியிடம் ஊழியத்தை! நற்செயல் இன்றியே சுவனம் புகுவதை ! பெண்ணிடம் உண்மையையும், வாக்குறுதி நிறை வேற்றுதலையும் ! உலகப் பற்றோடு இறைவனைத் தேடுவதையும் எதிர் பார்க்காதீர்கள் !

உன் நாவைப் பேணி, மனத்தைத் தடுத்துக் கொள்வாயாக! நீ செய்த பாவங்களை நினைத்து அழு !

நீங்கள் மனிதர்களை மிகுதியாக நினைப்பதைவிட அல்லாஹ்வை மிகுதியாக நினைவு கூர்ந்திடுங்கள் .

Sunday, June 8, 2014

நீ தொழும்போது உன் உள்ளத்தைப் பெருமையை விட்டும் பேணிக்கொள்

நீ தொழும்போது உன் உள்ளத்தைப் பெருமையை விட்டும் பேணிக்கொள்  !

நீ மனிதர்களிடையே இருந்திடும்போது உன் நாவைப் பேணிக்கொள்!

உண்ணும்போது மிகுதியான உணவை உன் வாயில் திணிப்பதை விட்டும் உன் தொண்டையைப் பேணிக்கொள்!

பிறரின் வீட்டில் இருக்கும்போது உன் கண்களைப் பேணிக்கொள்!

நீ , எங்கிருந்தாலும் எத்தொழில் செய்திட்டாலும் அல்லாஹ்வைத் தியானம் செய்துகொள்!

எந்நேரமும் மரணத்தை மிகுதியாக நினைத்துக் கொள்!

நீ பிறருக்குச் செய்த உதவியையும், பிறர் உனக்குச் செய்து விட்ட தீங்கினையும் மறந்துவிடு!

உனக்குப் பிறர் செய்த உதவிக்கு நன்றி காட்டு!

உலகில் வாழ்வதை விரும்புவர்,, இறந்துபோவதை வெறுப்பர் .

செல்வத்தை விரும்புவர் ,, அது பற்றிய கேள்வி கணக்கை வெறுப்பர்.

உயர்ந்த மாளிகைகளைக் கட்டுவதனை விரும்புவர் ,, மண்ணறையை மறந்து விடுவர்.

உலகத்தை விரும்புவர்! மறுமையை மறந்து விடுவர்.

படைக்கப்பட்டவற்றை விரும்புவர் ,, படைத்தவனை மறந்துவிடுவர்.

சுவனம் என்னிடமுள்ளது,, ஆனால், வழிபாடு உன் மூலம் நிகழவேண்டும் .

தெய்வீக தன்மை என்னில் உண்டாகும் ,, அடிமைத் தனம் உன்னில் நிகழவேண்டும்.

துஆ என்னும் இறைஞ்சுதல் உன்னில் நிகழவேண்டும் ,, அதனை ஒப்புக்கொள்ளுதல் என்னில் நிகழும்.

ஓ ! என் அடியானே! சோதனை என் மூலம் நிகழும்,, அதனைப் பொறுத்துக் கொள்வது உன்னில் நிகழ வேண்டும்.

உணவு அழிப்பது என்னில் நிகழும்  ,, நன்றி செலுத்துதல் உன்னில் நிகழவேண்டும்.

மன்னிப்பு என்பது என்னில் நிகழும்,, மன்னிப்புத் தேடுவது உன் மூலம் நிகழவேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்
 லேபல் .. இஸ்லாம் கூறும் அறிவுரைகள்.
ஒரு சிறிய பல்லு குத்தும் குச்சியைக் கூட  நாம் அலட்ச்சியமாக எண்ணக் கூடாது, அதுவும் சில நேரங்களில் பயன் தரும்!

Wednesday, June 4, 2014

இஸ்லாம் கூறும் இனிய அறிவுரைகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ..............
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!


''ஓ ! ஆதமின் மகனே! நான் உனக்குக் கொடுத்தவற்றைக் கொண்டு நீ திருப்தி கொள்வாயாயின், உன் உள்ளத்தை அமைதி பெறச்செய்வேன் .

அவ்வாறின்றி, நான் உனக்குக் கொடுத்தவற்றைக் கொண்டு திருப்தி கொள்ளாவிடின், உலகத்தை உன் மீது சுமத்திவிடுவேன்,, உலகம் எனும் மாயையில்  விலங்குகள் அசைபோடுவது போன்று நீயும் அலைந்து திரிவாய்!

என் அடியானே! என் கண்ணியத்தின் மீதும் வல்லமையின் மீதும் ஆணையாகக் கூறுகிறேன்.

நான் உனக்கென்று விதித்ததை தவிர, வேறு எதனையும் மிகுதியாக உலகில் பெற்றுக் கொள்ளமாட்டாய்!